Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயசந்திரன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற விழிப்புணர்வு கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சியில் மக்களுக்கு பொது அமைதியினை நிலை நிறுத்தும் வகையில் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயசந்திரன் தலைமையில் சமயபுரம் நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் துவங்கிய விழிப்புணர்வு கொடி அணி வகுப்பு உத்தமர் கோயில் மேம்பாலம் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.
இப் பேரணியில் திருச்சி மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஸ்ணன், சமயபுரம் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், லால்குடி முகமது ஜாபர், சிறுகனூர் சுரேஷ்குமார், பழனியம்மாள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.